Friday, December 18, 2009

என்னை கண்கலங்க வைத்த கதைகள்.....1

ஈழத்து போராளி எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர் துளசிச்செல்வன். ஆவரின் படைப்பில் என்னைக் கலங்க வைத்த கதைகளில் ஒன்று இது....

பொங்கலோ பொங்கல்

-துளசிச்செல்வன்-

கம்பங்களில் சில விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன. காற்றுக்கு படபடக்கும் அந்தச் சுடரகளில் கல்லறைகள் நன்றாகத் தொரிந்தன. மழை மீண்டும் வருவதற்கு ஆயத்தமாக வடக்குப்பக்கமாக இரைந்தது. அவனுக்குள் நினைவுகள் பாரமாய்க் கனத்தன. அந்தத் துயிலுமில்லத்திற்கு மட்டும் எத்தனை தோழர்கள், எவ்வளவு சகோதரிகள். பெருமூச்சு விட்டபடி நடையை விரைவுபடுத்தினான். காலையில் வந்து மாலையிட்ட முத்துவின் கல்லறை ஒரு மின்னல்க்கீற்றால் பளிச்சிட்டது. அந்த இடத்தில் கால்களில் ஆணி அறைந்தாற்போல் நின்றான்.

மாலைகள் வாடாமலே இருந்தன. உலருணவுகளை எறும்புகள் மொய்த்திருந்தன. முத்து என்ன சாப்பிடவே இல்லையா? என்று கேட்கவேண்டும் போலிருந்தது. அவனுக்காய் பரவியிருந்த எல்லா உலருணவையும் பாத்தான். சுருண்டு போன வாழையிலைக்குள் கொஞ்சம் சர்க்கரைப்பொங்கலும்... அவனுக்கு அழுகை வந்தது. முத்து கொஞ்சம் புக்கையாவது சாப்பிடன், கல்லறை முன்நிகழும் இதே கெஞ்சல் பாசறையிலும் ஒருநாள் நடந்தது.

சில வருடங்களிற்கு முன்னொரு பொங்கல் நாளில் முத்துவோடு ஒரு அணி பரந்தன் முன்னணி அரங்கில் நின்றது. பொங்கலுக்கு முதல் நாள்வரை பொங்குவதில்லை என்ற முடிவே இருந்தது. அந்த இடத்தில் அது சாத்தியமில்லை. பொழுது கருகிவிட்டது. இரவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. முத்துவுக்குள் அடக்கமுடியாத ஆசை காலம பொங்குவம். ஒவ்வொரு நாளும் வெடி கொழுத்திறம் ஒருநாளைக்காவது பொங்குவம்
என்று தொடங்கினான்.

அதுசாரி வராது கன பிரச்சனை இருக்கு ....

இல்லை மச்சான் பொங்குவம்...

பாயாசம் காய்ச்ச வேணும், பானையில அரிசியில்லை... என்று பாடித்தோழார்கள் ஆடத்தொடங்கினாhர்கள்.

சத்தம் போடவேண்டாம் செல்லடிப்பான்.
பக்கத்து காவலரணில் இருந்தவார்கள் சூழ்நிலையை விளக்கினாhர்கள். முத்து விடுவதாக இல்லை.

விடிய சார்க்கரைப்புக்கை பொங்கவேணும்.
இன்னும் பன்னிரண்டு மணிநேரத்துக்குள் தேடவேண்டியவை எவ்வளவோ. பானையிலிருந்து தண்ணிவரை எடுக்கவேண்டும். விறகிலிருந்து சார்கரை வரை தேடவேண்டும். முத்துவின் விடாதமுயற்சி ஏனையவார்களிற்குள் மறைத்துவைத்த ஆசைகளையும் வெளிக்கொணார்ந்தன. ஒவ்வொருவார் ஒவ்வொரு பொருள்களிற்காக வெவ்வேறு திசைகளிற்குப் போனார்கள்.

நள்ளிரவு கடக்கும்போது முத்து தலையில் பெரிய மூட்டையோடு வந்திருந்தான். பொங்கலுக்குத் தேவையான முக்கிய பொருட்கள். கிச்சின் கிழவனுக்கு ஜஸ் வைச்சு வேண்டப்பட்டபாடு.

வியார்வையிலூறிய மேற்சட்டையைக் கழட்டிவிட்டு மண்மூட்டையில் உட்கார்ந்தான்.

முத்து பானையும் எடுத்தாச்சு என்றுவிட்டு காவலரணுக்குள் பாதுகாக்கப்பட்ட அலுமினியப் பானை ஒன்றை வெளியே கொண்டு வந்தார்கள்.

தண்ணியை விடுபார்ப்பம். முத்து எழுந்து பானையைத் தூக்கினான். இன்னொருத்தன் தண்ணீரை விட்டான். ஒழுகியது. என்ன சார்க்கரைப்புக்கை சாரிவராதுபோல.... தோழார்கள் சோhர்ந்;து போனாhர்கள்.

முத்து ‘சோப் எடுத்து வா... என்றான். சில மணிநேரமும் பாதிச்சவார்க்காரமும் செலவழித்த பின் ஒழுகுவது ஓரளவு நின்றது.

எரிச்சா நின்டிடும் என்றுவிட்டு அடுப்பை மூட்டினான்.

கவனம் மறைப்பு கட்டிப்போட்டு பொங்கு பிறகு படைக்கேக்க மட்டும் சூரியனுக்குக் காட்டுவம்.

சாக்கு மறைப்பிற்குள் சூரியப்போங்கல்.... அவார்கள் பக்கத்துக் காவலரண்காரார்களிற்கும், எதிரியின் காவலார்களிற்கும் தெரியாது பொங்கவேண்டும். இயன்ற வரை மறைத்தார்கள். ஈர விறகுகள் இரகசியத்தைக் காற்றில் பறக்கவிட்டன. பக்கத்துக் காவலரணைவிட முதலில் எதிரி கண்டுவிட்டான்.

சரி இறக்கடா.... காணும்... சுற்றி நின்றவார்கள் அவசரப்படுத்தினார்கள். முத்து ரசித்து, அனுபவித்துக் கிளறிக்கொண்டிருந்தான். எறிகணைகள் குழல் வாயிலிருந்து புறப்படும் சத்தம் கேட்டன. மறுவினாடி... எங்கும் புகை... எறிகணைகளைத் தொடார்ந்து டாங்கிகளின் இரைச்சல்... துப்பாக்கிச்சூடுகள் அந்தக் காவலரண் பகுதியே சின்னாபின்னமாக்கப்பட்டது. முன்னேற்ற முயற்சி தோல்வி கண்டது. கிபிரும் வந்து குண்டு வீசிப்போனது. அது போர்க்களத்திலல்ல. அவார்களில் இருந்து வெகுதூரத்தில் உள்ள வயற்கிராமத்தில். சண்டை ஓய்ந்தபோது ஒவ்வொரு காவலரணிற்குள்ளும் எல்லோரும் உள்ளார்களா என்ற துடிப்போடு தொலைத்தொடார்பு கருவிகளும் வாய் உரையாடலும் சத்தமிட்டுக்கொண்டிருந்தன. பாதுகாப்பு நிலைச்சண்டை ஆகையினால் யாருக்கும் காயமோ வீரச்சாவோ ஏற்படவில்லை. முத்து எங்க... தேட ஆரம்பித்தார்கள். சண்டை நடக்கும் நேரமெல்லாம் காவலரணுக்குள் நின்றான்... இப்போது எங்கே.

'சரி சூரியனுக்குப் படைக்கப்போறன் வாறாக்கள் வா..."

வந்து கொண்டிருந்த சாப்பாட்டு உழவு இயந்திரத்தின் சத்தத்திலும் பார்க்க முத்துவின் குரல் எல்லாக் காவலரணுக்கும் ஓங்கி ஒலித்தது. சண்டை ஓயவே அவன் பொங்கல்ப்பானைக்கு கிட்ட போய்விட்டான். அத்தனை எறிகணை வீச்சிற்குள்ளும் அது தப்பியது அதிசயம்தான். கெதியா இறக்கு... கெதியாப்படை... அடுத்த தரம் அடிக்கமுதல் சாப்பிடுவம்.
முத்துவைச் சுற்றி நின்ற போராளிகள் அவசரப்படுத்தினார்கள். சாப்பாடு எடுக்கப் போனவன் சில சொப்பின்பை பொதிகள் சுமந்து வந்தான்.

டேய் உது இண்டைக்கு தேவையில்லை....

இஞ்ச திறம் புக்கை காச்சியாச்சு...

முத்து மகிழ்ச்சி பொங்கச் சொன்னான்.

கேட்டவன் அப்படியிருக்கவில்லை. அழுதான். அடக்க முடியாது விக்கிவிக்கி அழுதான். எல்லோரும் அவனைப் பார்த்தனா;. அவன் சின்ன விசயத்திற்கு அழக்கூடியவனில்லை. இறுக்கமான மனசு. இலையில் பரப்பப்பட்ட சார்க்கரைப்பொங்கலில் இருந்து ஆவிபறந்தது. வாசனை வீசியது. ஏன் அருகில் நின்றவன் சாப்பாட்டு பையுடன் வந்தவனின் தோளில் கைபோட்டுக் கேட்டான். அவனது கைகளிலிருந்த பொட்டலங்களை மண்மூட்டையில் வைத்தான். குனிந்தபடியே இப்ப கிபிர் வந்து அடிச்சதில... விழுங்கினான், விக்கினான்...?

பொங்கிக் கொண்டிருந்த ஏழெட்டுச்சனம் செத்துப் போட்டுதுகலாம்...

அவன்ர அப்பா, அம்மாவைக் கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்தநேரம் கூட இப்படி அழுதிருக்கமாட்டான். அப்ப சின்ன வயசு...

பொங்கல் பானையும் படையலும், வந்த சாப்பாட்டுப் பொதிகளும் தனிமையில் கிடந்தன. போராளிகள் காவலரணொன்றிற்குள்ளும் பதுங்குகுழிக்குள்ளும் இருந்தார்கள். நாட்குறிப்பு எழுதினார்கள். துப்பாக்கியை துப்பரவு செய்தார்கள். கலைந்த உருமறைப்பை சாரிசெய்தார்கள். சிதைந்த காவலரண்களைத் திருத்தினார்கள். ஆனால் யாரும் சாப்பிடவில்லை. அந்த சார்க்கரைப்பொங்கல் இரவு கடந்தும் அப்படியே கிடந்தது.

அதிகாலை மறுபடி சண்டை. முன்னைய நாளைவிட கடுமையான முன்னேற்ற முயற்சி - உக்கிரமான சண்டை. சண்டை ஓய்ந்தது முன்னேற்ற முயற்ச்சி தடைப்பட்டது. இப்போதும் பொங்கல் பானை அதே இடத்தில் - சார்க்கரைப்பொங்கலோடு. யாரும் சாப்பிடவில்லை. இனிச் சாப்பிடவும் பலர் இல்லை.

முத்து... இலக்கியன்... அருளன்...இந்து..!

காவு குழுக்காரார் ரத்தமோடு கிடந்த அவார்களைத் துக்கிக்கொண்டு போனார்கள். அந்தப் பொங்கல் பானையுள்ள பக்கம் செல்லாமலே பல நாட்கள் அதே காவலரண்களில் வாழவேண்டியிருந்தது. நினைவுகள் எப்படி செல்லாது இருக்கும்....

மழை தூறத்தொடங்கியது. மறுபடியும் அவன் நனையத்தொடங்கினான். முத்துவின் கல்லறைக்கு அருகோடே சிறிது நேரம் இருந்தான். மனசு பொங்கியது, கண்கள் பொங்கி - எழுந்தான். காவலரண்களில் இன்னும் அவனிற்கான பணியிருப்பதை நினைத்துக் கொண்டு நடந்தான். எப்போதாவதுவரும் நல்லதொரு சூரியப்பொங்கல்.

பி.கு. துளசிச்செல்வனுக்கு என்ன நடந்தது என்று யாருக்காது தெரியுமா...?

0 comments: